வடமேல் மாகாண சபை அரசாங்க சேவையின் உள்ளூராட்சித் திணைக்களத்தில் வருமானப் பரிசோதகர் (தரம் III) பதவிகளுக்கான ஆட்சேர்ப்புத் தொடர்பான அறிவித்தலை மாகாண அரச சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2026 மே மாதத்தில் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
வெற்றிடங்களின் எண்ணிக்கை
- வடமேல் மாகாண சபையில் மொத்தம் 40 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
- இது ஒரு நிரந்தரமான மற்றும் ஓய்வூதியத் தகுதியுள்ள பதவியாகும்.
தகைமைகள்
விண்ணப்பதாரர்கள் பின்வரும் அடிப்படைத் தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்:
- வதிவிடம்: விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதியன்று வடமேல் மாகாணத்தில் கடந்த 03 வருடங்களாவது தொடர்ச்சியாக நிரந்தரமாக வசித்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- வயது எல்லை: விண்ணப்பம் கோரப்படும் இறுதித் திகதியன்று வயது 18 இற்குக் குறையாமலும் 30 வயதிற்கு மேற்படாதிருத்தலும் வேண்டும். (ஏற்கனவே அரச சேவையில் நிரந்தரப் பதவியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயது எல்லை பொருந்தாது) .
- கல்வித் தகைமை:
- க.பொ.த. (சா/தர): சிங்களம்/தமிழ், கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளடங்கலாக 06 பாடங்களில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாமல் சித்தியடைந்திருத்தல் வேண்டும். இதில் 05 பாடங்களை ஒரே அமர்வில் சித்தியடைந்திருப்பது அவசியமாகும்.
- க.பொ.த. (உ/தர): அனைத்துப் பாடங்களிலும் (பொதுப் பரீட்சை நீங்கலாக) ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
- ஏனையவை: இலங்கைப் பிரஜையாகவும், நன்னடத்தை மற்றும் சிறந்த உடல் ஆரோக்கியம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்கள் இணையவழி (Online) ஊடாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் psc.nw.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பின்னர், அதன் அச்சிடப்பட்ட பிரதியை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
- பரீட்சைக் கட்டணம்: ரூபா 1,200/-.
- விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி: 2026 ஏப்ரல் 27.
- தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளர், வடமேல் மாகாண சபை அரசாங்க சேவை ஆணைக்குழு, வடமேல் மாகாண சபைகள் கட்டிடத் தொகுதி, குருநாகல்.
- மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பம் – இங்கே பெற்றுக் கொள்ளலாம் | விண்ணப்பம்





