அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத் தொகையை (Festival Advance) அதிகரிப்பது தொடர்பான உத்தியோகபூர்வ சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் விபரங்கள் வருமாறு:
- அதிகரிக்கப்பட்ட தொகை: அரச ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 10,000 ரூபா பண்டிகை முற்பணமானது தற்போது 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படை அனுமதி அண்மையில் வழங்கப்பட்டிருந்தது.
- யார் பெறலாம்?: தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளுக்கு அமைய, பௌத்த மத பண்டிகைகள், ரமழான், தீபாவளி மற்றும் நத்தார் பண்டிகைகளை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள் இம்முற்பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
- மீளச் செலுத்துதல்: பெற்றுக்கொண்ட முற்பணத் தொகையை வட்டியின்றி 10 மாதத் தவணைகளில் (அல்லது அதற்கு குறைவான தவணைகளில்) சம்பளத்தில் இருந்து மீளச் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் இந்த முற்பணத் தொகை 10,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







