எதிர்வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் அனைத்து அரச அலுவலகங்களையும் வழமை போன்று நடாத்திச் செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த மூன்று தினங்களிலும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் எவ்வித மாற்றமுமின்றி தடையின்றி முன்னெடுக்கப்படும்.
எதிர்வரும் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் அரச ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை செய்யும்’ (Work From Home) முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழலில் அலுவலகங்களுக்கு வருகை தந்து பணியாற்றுவதே சிறந்தது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் புதன்கிழமையும் (15ஆம் திகதி) வழமையான வேலை நாளாகவே கருதப்படும்.
அரச சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.







