நாட்டில் பண்டிகைக் காலத்தையொட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் விநியோகத்திற்கான QR முறைமை, இன்று (18) நள்ளிரவு முதல் மீண்டும் கட்டாயமாக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
கடந்த 11ஆம் திகதி தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த இந்த நடைமுறை, இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படியே தொடரும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் (Odd/Even system) எரிபொருள் விநியோகம் நடைபெறும் என்றும்,
முன்னைய வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டு அளவிலேயே வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அனைத்து பெற்றோல் நிலையங்களிலும் QR குறியீட்டைப் பயன்படுத்தி மாத்திரமே எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.







