களுத்துறை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்காக பாடசாலைக்குச் செல்லாத வயதுடைய 161 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகப்படியான சிறுவர்கள் தொடாங்கொடை பிரதேச செயலகப் பிரிவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டச் செயலகத்தில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இந்தத் தகவல்கள் பகிரப்பட்டன.
களுத்துறை மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் அறிக்கையின்படி, பாடசாலை செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை பிரதேச செயலகப் பிரிவுகளின் அடிப்படையில் பின்வருமாறு பிரிந்து காணப்படுகின்றன:
- தொடாங்கொடை: 51
- ஹொரண: 20
- பாணந்துறை: 15
- களுத்துறை: 15
- மத்துகம: 15
- பேருவளை: 14
- பாலிந்தநுவர: 08
- பண்டாரகம: 07
- அகலவத்தை: 07
- இங்கிரிய: 04
- மில்லனிய: 02
- மதுராவல: 02
- வலல்லாவிட்ட: 01
குறிப்பிடத்தக்க வகையில், புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் பாடசாலை செல்லாத சிறுவர்கள் எவரும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






