இலங்கை பாடசாலைக் கல்வியில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் (Education Reforms) 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
புதிய சீர்திருத்தச் செயற்பாடுகள் 2026 ஆம் ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளன.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி:
- தரம் 6: புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 6 மாணவர்களுக்கான முறையான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2026 ஜனவரி 21 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
- தரம் 1: தரம் 1 இற்கான மாணவர்களை இனங்காணும் செயற்பாடுகள் ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும் அதேவேளை, அவர்களுக்கான புதிய முறையிலான கல்விச் செயற்பாடுகள் 2026 ஜனவரி 29 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பமாகும்.
கற்கை நூல்கள் மற்றும் மொடியூல்கள்:இற்கான
புதிய சீர்திருத்தத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் வளங்கள் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னரே வழங்கப்படவுள்ளன.
- தரம் 1 மாணவர்களுக்கு: செயற்பாட்டு நூல்கள் (Activity Books)
- தரம் 6 மாணவர்களுக்கு: கற்றல் மொடியூல்கள் (Learning Modules)
இதற்கிடையில், (தரம் 5-13) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று ஜனவரி 5 ஆம் திகதி காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை நடைபெறும் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.







